இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழா, ஒரு நாட்டின் நாகரீக வரலாற்றை எடுத்துரைக்கும் ஒரு தருணத்தை குறிக்கிறது.
அதே நேரத்தில், மிகவும் வளமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியைக் கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகால சுதந்திரப் போராட்டத்தின் தீர்க்கமான கட்டத்தின் போது காணப்பட்ட தேசிய நனவின் விழிப்புணர்வை இந்தியா காண்கிறது. அந்தக் கட்டிடத்தை மீண்டும் ஒரு 'புதிய இந்தியாவின்' அடையாளமாகக் காட்டி, அதை தனது அரசாங்கத்தின் நலன்புரி விநியோகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள், குடியரசுத் தலைவரை அழைக்காததன் மூலம்;, கடுமையான அவமான செயல் என்று எதிர்ப்புத் தெரிவித்து விழாவில் பங்கேற்கவில்லை.
புதிய கட்டிடத்தில் தனது முதல் உரையை ஆற்றிய பிரதமர் மோடி, புதிய கட்டிடம் 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகள் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பாகும். நாட்டின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகுக்கு உணர்த்துவதாகவும் 'தேசியப் பெருமை' உணர்வை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
இது நமது ஜனநாயகத்தின் கோவில். இது இந்தியாவின் உறுதியைப் பற்றி உலகுக்குச் சொல்லும் செய்தி. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திட்டமிடலை யதார்த்தத்துடன் இணைக்கிறது. கொள்கையை உணர்தல், நிறைவேற்றுவதற்கான மன உறுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கிறது. புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலம் மட்டுமே புதிய மாதிரிகளை உருவாக்க முடியும்.
புதிய ஆற்றல், புதிய ஆர்வம், புதிய உற்சாகம், புதிய சிந்தனை மற்றும் புதிய பயணம் உள்ளது. புதிய தரிசனங்கள், புதிய திசைகள், புதிய தீர்மானங்கள் மற்றும் புதிய நம்பிக்கை உள்ளது. இந்தியா முன்னேறும் போது, உலகம் முன்னோக்கி நகர்கிறது. நாடாளுமன்றத்தின் இந்தப் புதிய கட்டிடம் இந்தியாவின் வளர்ச்சியுடன் உலகின் வளர்ச்சிக்கும் அழைப்பு விடுக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM