(எம்.மனோசித்ரா)
டொலரின் பெறுமதி குறைவடைந்து வருகின்றமைக்கு சமாந்தரமாக மருந்துகளின் விலைகளையும் மிக விரைவாக குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதற்கமைய டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் மருந்துகளின் விலைகளை குறைந்த பட்சம் 15 சதவீதத்தினால் குறைக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய பொது மக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் மருந்துகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் உரிய திணைக்களங்கள் மற்றும் விலை நிர்ணய குழுக்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளுடன் துரிதமாகக் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM