வவுனியா சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
வவுனியா சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட 24 வயது நபரொருவருக்கெதிராக 11 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது 38 வயதாகும் குறித்த நபருக்கு செவ்வாய்க்கிழமை (30) வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் 9 குற்றச்சாட்டுகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் 10,000 ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கிய நீதிபதி 10 ஆம் மற்றும் 11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM