போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி

Published By: Digital Desk 5

30 May, 2023 | 03:03 PM
image

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளை வழங்கி வர்த்தக நிலையமொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முற்பட்டுள்ளார். 

இதன் போது குறித்த வர்த்தக நிலையத்திலிருந்த வர்த்தகருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார். அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் வசிக்கும் கும்புக்வெவ சிங்கராஜா பிரதேசத்தில் உள்ள வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த வீட்டிலிருந்து மேலும் போலி நாணயத்தாள்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தினுடைய ஆலோசனைக்கமைய வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44