வங்கி அதிகாரி ஒருவரின் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர்கள் இருவரை தலங்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தலவத்துகொடையில் உள்ள வைத்திய நிலையத்தின் கார் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வங்கி அதிகாரி ஒருவரின் காரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட கார், காரை திருட ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட மென்பொருளுடன் கூடிய நவீன இயந்திரம், சந்தேக நபர்கள் திருடவந்த கார் மற்றும் சுமார் 2000 சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த 27 ஆம் திகதி இரவு, வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காகச் சென்ற அத்துருகிரியவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர், அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு, சிகிச்சைக்காகச் சென்ற பின், கார் நிறுத்திய இடத்துக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரை காணாததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.
இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காரை திருடிய இரு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதுடன் திருடப்பட்ட காரையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM