வங்கி அதிகாரியின் திருடப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு காருடன் இருவர் கைது

Published By: Digital Desk 3

30 May, 2023 | 12:30 PM
image

வங்கி அதிகாரி ஒருவரின் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை திருடிய சந்தேக நபர்கள் இருவரை தலங்கம பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

தலவத்துகொடையில் உள்ள வைத்திய நிலையத்தின் கார் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வங்கி அதிகாரி ஒருவரின் காரே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

திருடப்பட்ட கார், காரை திருட  ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட மென்பொருளுடன் கூடிய நவீன இயந்திரம், சந்தேக நபர்கள் திருடவந்த கார் மற்றும் சுமார் 2000 சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 27 ஆம் திகதி இரவு, வைத்திய நிலையத்திற்கு சிகிச்சைக்காகச் சென்ற அத்துருகிரியவைச் சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர், அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்திவிட்டு, சிகிச்சைக்காகச் சென்ற பின், கார் நிறுத்திய இடத்துக்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரை காணாததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காரை திருடிய இரு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதுடன் திருடப்பட்ட காரையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51