முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் உடையார்கட்டு கமநலசேவைத் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குளமாக காணப்படும் வெள்ளப்பள்ளம் குளம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குளமாக காணப்பட்டுள்ளது.
இந்த குளம் இருப்பதால் அருகில் உள்ள மக்களுக்கான குடிதண்ணீர், கால்நடைகளுக்கான மேச்சல் மற்றும் தண்ணீர் மீன்பிடி தொழில் மேட்டு நில பயிர்செய்கை என மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இந்த குளத்தின் கீழ் விவசாய செய்கை காணப்படாத நிலையில் அருகில் சில காணிகளில் நெல்விதைப்பினை காலபோகத்தில் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவ்வாறு காணப்படும் குளத்தினை தனிநபர் ஒருவர் அபகரித்து எல்லை கற்கள் போட்டு வேலி அடைத்து வைத்துள்ளதால் தனிநபரின் அபகரிப்பிற்கு உள்ளாகியுள்ள குளத்தை மீட்க கிராம மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
திங்கட்கிழமை (29) வெள்ளப்பள்ளம் குளப்பகுதியில் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள் இதன்போது 100 வரையான மக்கள் பங்கெடுத்துள்ளார்கள். பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டு குளத்தினை தனிநபர் ஆக்கிரமிப்பிற்கு எதிர்பு தெரிவித்துள்ளார்கள் தொடர்ந்து அங்கு நாட்டப்பட்ட தூண்களை மக்கள் அகற்றியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலகம் முன்பாக எதிர்ப்பினை வெளிப்படுத்தி மனுவினை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளார்கள்.
இதன்போது குறித்த குளம் தொடர்பில் பிரதேச செயலாளர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குளஆக்கிரமிப்பு தொடர்பில் மேலதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மேலும் ஆராயவுள்ளோம் முதல் ஆரம்ப கட்ட நடவடிக்கையின் படிகுளம் அமைந்துள்ள காணி தனியார் காணியாக காணப்படுகின்றது குளத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு விவாசாய திணைக்களத்திடம் இருக்கின்றது மேலதிகமாக என்ன செய்யலாம் என்பது தொடர்பில் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM