அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு முறைப்பாடு

Published By: Vishnu

29 May, 2023 | 10:27 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர்  புதிய சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் அரசியலமைப்பு  பேரவை  நடவடிக்கை எடுக்காதுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பிர் எதிர்க்கட்சிகளும் பல்வேறு இழுத்தடிப்புகளை செய்கின்றன. இவற்றை கருத்தில் கொள்ளாது அரசியலமைப்பு பேரவை  செயல்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடமிருந்து நீக்கப்பட்டு, அந்த  அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கியதன் நோக்கம் ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை மற்றும் செயல்திறன்  ஆகியவற்றை கருத்தில் கொண்டே, ஆனால் நோக்கம் தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதி வசம் இருந்த காலப்பகுதியில், சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும்  கோட்டபாயய ராஜபக்ஷ ஆகியவர்களின் ஆட்சி காலங்களில் உரிய வகையில் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர் தெரிவு இடம்பெற்றது. ஆனால் இன்று அவ்வாறு இல்லை.

ஏனெனில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற வசமாவதில் உள்ள தோல்வி நிலையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06