பாணந்துறையில் இரண்டு மாடி வீட்டிலிருந்து சடலம் மீட்பு!

29 May, 2023 | 05:28 PM
image

பாணந்துறை, வெகடபஹங்கம பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றின் அறையில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட  நபரொருவரின் சடலம் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் இந்த இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தங்கியிருந்த அறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாணந்துறை தெற்கு பொலிஸார் இன்று (29) இந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே குறித்த சடலம் பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளது. 

இவர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்ட வீட்டின் உரிமையாளர் வீட்டின் கீழ் தளத்தில் இருந்ததாகவும், இம்மரணம் தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01