உலக அமைதிக்கான மக்களின் எழுச்சி : 10ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் தென் கொரியா உள்ளிட்ட 59 நாடுகள்! 

Published By: Nanthini

29 May, 2023 | 10:20 PM
image

உலகில் அமைதியை கட்டியெழுப்புவதற்காக உலக மக்களே ஒன்றுதிரளும் தசாப்த கால முயற்சியினை நினைவுகூரும் வகையில் இந்த மே மாதம் முழுவதும் 59 நாடுகளில் அமைதி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில், தென் கொரியாவில் உள்ள சியோல் ஒலிம்பிக் பூங்காவின் (Seoul Olympic Park) அமைதி வாயிலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை அமைதிக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இடம்பெற்றது. 

சுமார் 5000 பேரின் பங்கேற்பில் ஆரம்பமான இந்நிகழ்வில் சொர்க்க கலாசாரம், உலக அமைதி மற்றும் ஒளியை நிலைநிறுத்தல் என்கிற கோட்பாடுகளை கொண்டியங்கும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான HWPL அமைப்பின் தலைவர் மான் ஹி லி பங்கேற்றார். 

'HWPLஇன் உலக அமைதிப் பிரகடனம் மற்றும் அமைதி நடைப்பயணத்தின் 10வது ஆண்டு நினைவு' எனும் கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்வில் HWPL தலைவர் மான் ஹி லி உரையாற்றுகையில், 

"உலக அமைதிக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று 10 ஆண்டுகளுக்கு முன் உறுதியளித்த நாள் முதல் தற்போது வரை உலகம் முழுவதுமான அமைதிக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.

நாம் வீட்டிலும் பள்ளியிலும் அமைதியைக் கற்பிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அமைதியின் தூதுவர்களாக மாற வேண்டும். 

'அமைதி' என்ற ஒற்றைச் சொல்லின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு, நல்லதொரு உலகத்தை உருவாக்கி, அதை ஒரு சிறந்த பாரம்பரியமாக மாற்றி, வருங்கால சந்ததியினருக்கு அளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நாம் வாழும் இந்த காலகட்டத்தில் நாம் செய்யவேண்டிய நற்செயல் இதுவே என தெரிவித்துள்ளார்.  

இந்நிகழ்வில் HWPL அமைப்பினால் உலக அமைதிப் பிரகடனத்தின் 10ஆவது ஆண்டு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. 

ஜனநாயகம், நீதி, சிவில் உரிமைகள் மற்றும் சமத்துவம், மத சுதந்திரம் மற்றும் பொறுப்புடைமை என்ற கொள்கைகளின் அடிப்படையில், அதிகார ஆட்சியிலிருந்து சட்ட ஆட்சிக்கான மாற்றத்தை தொடர 'அமைதி மற்றும் போர் நிறுத்தப் பிரகடனம் - DPCW' உருவாக்கப்பட்டதாக கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44