கொழும்பில் இடம்பெற்ற நடாசா எதிரிசூரியவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை அடையாளம்கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர்.
நடாசாவின் இந்த நிகழ்வில் பௌத்தத்தை அவமதிக்கும் கருத்துக்கள் வெளியானதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படும் நிலையிலேயே சிஐடியினர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் சைபர்குற்ற பிரிவு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரியவை ஜூன் ஏழாம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.இலங்கையிலிருந்து வெளியேற முயன்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM