கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மாகாண பிரதம செயலாளர் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான தலைவர் சித்திக் மற்றும் அவரது அதிகாரிகளுக்கும் இடையில் சனிக்கிழமை (27) கொழும்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாகவும், இலங்கையில் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் கிழக்கு மாகாணத்திலேயே அதிகம் காணப்படுவதால், அவர்களுக்காக புதியதொரு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து, இத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவளிப்பதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM