(ஏ.என்.ஐ)
ஜம்மு - காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள துல்முல்லாவில் நடைபெற்ற 'கீர் பவானி மேளா'வின்போது ஏராளமான காஷ்மீரி பண்டிட்கள் புகழ்பெற்ற ரக்னியா தேவி கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது முப்தி, ஜம்மு மற்றும் பிற இடங்களில் இருந்து வந்துள்ள எங்கள் காஷ்மீரி பண்டிட் சகோதரர்களை வரவேற்க நான் இங்கு வந்தேன். இதனால் இந்து - முஸ்லிம் - காஷ்மீர் பண்டிட்கள் மீண்டும் காஷ்மீரில் சகோதரத்துவத்துடன் வாழ முடியும் என்று கூறியுள்ளார்.
கீர் பவானி மேளாவானது காஷ்மீரி பண்டிட்களின் மிக முக்கியமான திருவிழாவாகும்.
பண்டிட் சமூகத்துக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கும் இடையிலான சகோதரத்துவத்தைப் பற்றிய செய்தியை இந்த திருவிழா சுட்டிக்காட்டுகிறது.
ஜம்மு - காஷ்மீர் அமைதி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி வருவதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
இந்த ஆண்டு யாத்திரிகளுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 125 பேருந்துகளில் குறைந்தது 4500 - 5000 பக்தர்கள் யாத்திரையின்போது பல்வேறு கோயில்களுக்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM