ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரும் பிரபல அறிவிப்பாளருமான அல்-ஹாபிழ் அஸ்மி சாலியின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஒலிபரப்புத் துறையில் பணிபுரிந்த அல்-ஹாபிஸ் அஸ்மி சாலியின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் போரம் விடுத்துள்ள அனுதாப செய்தியிலே தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகத்துறையில் பணிபுரியும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஹாபிஸ்களுள் ஒருவரான அஸ்மியை ஆளுமைகள் நிறைந்த ஒருவராக அடையாளப்படுத்தலாம். சிங்கள, தமிழ், முஸ்லிம் ஊடக சமூகத்தில் எல்லோராலும் கௌரவமாக மதிக்கப்பட்ட அஸ்மியின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ஹும் அஸ்மி சாலி ஆசிரியராக, ஒலிபரப்பாளராக, ஒரு நாடகக் கலைஞராக, தனது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார்.
அவருடைய மரணமானது இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை வானொலியில் அறிவிப்புத் துறையில் ஹாபிஸ்கள் இணைந்திருந்தது ஒரிரு சந்தர்ப்பமாகும். அந்த வகையில் அஸ்மி சாலி ஹாபிஸாக இருந்து தனது பணியைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார். அவர் கல்வித்துறையிலும் ஓர் ஆசிரியராக தாம் வாழ்ந்த பிரதேசத்தின் சமூக அபிவிருத்திக்கும் பல முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார்.
அன்னாருடைய மறைவு ஊடகத்துறைக்கு மட்டுமன்றி, கல்வித்துறைக்கும் பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு, அன்னாருடைய குடும்பத்தவர்களுக்கும் வல்ல இறைவன் மன ஆறுதலை வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM