மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் - விதுர விக்ரமநாயக்க

Published By: Vishnu

28 May, 2023 | 05:52 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மத சுதந்திரம் மற்றும் அதன் விடயங்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். அத்துடன் மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விசாரணை ஆரம்பித்திருக்கிறோம் என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

பெளத்த மதம் உட்பட மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் அண்மையில் ஒருசிலர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடாஷா எதிரிசூரிய என்ற பெண்ணொருவர் பெளத்த மதத்தை அவமானப்படுத்தும் வகையில்  பொது இடமொன்றில் உரையாற்றி இருந்தார். 

இவரின் உரை தொடர்பாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. அதன பிரகாரம் குறித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். பெளத்த சாசன அமைச்சின் நேரடி தலையீட்டின் மூலமே இதனை மேற்கொண்டோம்.

அத்துடன் நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகவும் இதனை தடுப்பதற்காகவும் பொலிஸாருடன் இணைந்து நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை அமைத்திருக்கிறோம்.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இ்ம்பெறும்போது எமது அமைச்சுக்கும் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இவற்றை தடுப்பதற்கு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

புத்தசாச அமைச்சு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக எந்தநேரமும் விழிப்புடனே இருக்கிறது. அதனாலே நடாஷாவின் காணொளி இணைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு  ஒரு சில மணித்தியாலங்களில் நடாஷாவை கைதுசெய்ய முடியுமாகியது.

எனவே மதங்களை அகெளரவப்படுத்தி, அதன் விடயங்களை திரிபுபடுத்துவது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவர எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08