(எம்.ஆர்.எம்.வசீம்)
மத சுதந்திரம் மற்றும் அதன் விடயங்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம். அத்துடன் மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விசாரணை ஆரம்பித்திருக்கிறோம் என புத்தசாசன மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
பெளத்த மதம் உட்பட மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் அண்மையில் ஒருசிலர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக முன்னெடுக்க இருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மதங்களை அகெளரவப்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனுடன் தொடர்புபட்டவர்கள் தொடர்பில் பொலிஸாருடன் இணைந்து இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் நடாஷா எதிரிசூரிய என்ற பெண்ணொருவர் பெளத்த மதத்தை அவமானப்படுத்தும் வகையில் பொது இடமொன்றில் உரையாற்றி இருந்தார்.
இவரின் உரை தொடர்பாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. அதன பிரகாரம் குறித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். பெளத்த சாசன அமைச்சின் நேரடி தலையீட்டின் மூலமே இதனை மேற்கொண்டோம்.
அத்துடன் நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாகவும் இதனை தடுப்பதற்காகவும் பொலிஸாருடன் இணைந்து நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை அமைத்திருக்கிறோம்.
ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் இ்ம்பெறும்போது எமது அமைச்சுக்கும் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இவற்றை தடுப்பதற்கு நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.
புத்தசாச அமைச்சு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக எந்தநேரமும் விழிப்புடனே இருக்கிறது. அதனாலே நடாஷாவின் காணொளி இணைத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் நடாஷாவை கைதுசெய்ய முடியுமாகியது.
எனவே மதங்களை அகெளரவப்படுத்தி, அதன் விடயங்களை திரிபுபடுத்துவது தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவர எதிர்பார்க்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM