கேகாலை, அரநாயக்க நீர் திட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்த சம்பவம் : 6 பாடசாலை மாணவர்களிடம் விசாரணை

Published By: Vishnu

28 May, 2023 | 03:40 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கேகாலை, அரநாயக்க அசுபினி எல்ல நீர் திட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட நீர் குழாய்கள் தீப்பிடித்த சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நீர்த் திட்டம் கடந்த 21  ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதுடன், இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த நீர் குழாய்கள் தீப்பிடித்துள்ளது.

அரநாயக்க அசுபினியெல்ல நீர் திட்டத்திற்கு தேவையான குழாய்கள் உஸ்ஸாபிட்டிய பொது விளையாட்டரங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த போது கடந்த 19 ஆம் திகதி மாலை அவற்றில் தீ பரவியுள்ளது.

பின்னர் மாவனல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பல கோடி ரூபா பெறுமதியான நீர்க்குழாய்கள் அவற்றிலிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து நாசகார செயல் என தெரிவிக்கப்பட்டதையடுத்து அரநாயக்க பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி நீர் குழாயில் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் 6 பாடசாலை மாணவர்களிடம் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த 6 பாடசாலை மாணவர்களும் அரநாயக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகவும், இவ்வருடம் கல்விப் பொதுச் சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குழுவாகும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

விசாரணைக்கு பின் மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தால் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58