தமிழில் தேவாரம் பாடி பூஜையுடன் தொடங்கிய இந்தியாவின் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா

Published By: Rajeeban

28 May, 2023 | 11:04 AM
image

தமிழில் தேவாரம் பாடி பூஜையுடன் இந்தியாவின்புதிய நாடாளுமன்ற திறப்பு விழா தொடங்கியது. ஆதினங்களிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் அவர்களிடம் இருந்து செங்கோலை பிரதமர் மோடி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்த மாற்றமும் செய்ய முடியாது என்பதால், அதற்கு பதிலாக புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தியாவின் ஜனநாயக பாரம்பரிய சிறப்புகளையும், பெருமைகளையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் பிரம்மாண்டமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரம்மாண்ட ஹால், நூலகம், பல்வேறு கமிட்டிகளுக்கான அறைகள், உணவுக்கூடம், விசாலமான வாகன நிறுத்த பகுதிகள் என பல்வேறு வசதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ராஜபாதை சீரமைப்பு, பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஒரு அங்கமாகவும் இந்த நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடம் வட்ட வடிவில் இருக்கும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடம் முக்கோண வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா காலை 7.30 மணிக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. முன்னதாக பிரதமர் மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார். இதன் பின்னர் காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்றனர். தமிழில் தேவாரம் பாடப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி தொடங்கியது.

இதன் பின்னர் யாகம் வளர்த்து பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆதினங்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினர். ஆதினங்களிடம் ஆசி பெற்று செங்கோலை நாடாளுமன்ற கட்டடத்திற்கு கொண்டு சென்றார் பிரதமர் மோடி.  இதனை தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சர்வ மத பிராத்தனை நடைபெறுகிறது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்லாந்து தலைநகரில் வணிகவளாகத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவம்...

2023-10-03 16:43:04
news-image

சர்வதேச நாணயநிதியத்தில் சீனாவிற்கு அதிகளவுவாக்குரிமையை வழங்கவேண்டும்...

2023-10-03 16:02:39
news-image

‘நியூஸ்கிளிக்’ ஊடகவியலாளர்களின் வீடுகளில் டெல்லி பொலிஸார்...

2023-10-03 16:36:23
news-image

நேபாளத்தில் பூகம்பம் ; டெல்லிவரை அதிர்ந்தது

2023-10-03 15:25:47
news-image

டிரம்பின் வர்த்தக சாம்ராஜ்யத்தை சிதைக்ககூடிய நீதிமன்ற...

2023-10-03 14:58:10
news-image

கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா...

2023-10-03 16:31:39
news-image

இந்தியா - மகாராஷ்டிராவிலுள்ள அரச வைத்தியசாலையில்...

2023-10-03 14:24:38
news-image

பின்லாந்தில் அறிமுகமாகிறது உலகின் முதல் டிஜிட்டல்...

2023-10-03 14:45:47
news-image

கொவிட் தடுப்பூசி உற்பத்திக்கு முக்கிய பங்காற்றிய...

2023-10-03 11:44:06
news-image

எகிப்தில் பொலிஸ் வளாகத்தில் தீ விபத்து...

2023-10-02 13:42:14
news-image

மெக்சிக்கோவில் தேவாலயத்தின் கூரை இடிந்து விழுந்து...

2023-10-02 13:04:07
news-image

மனசாட்சி இல்லாத தனி நபா்களாலும், தனியாா்...

2023-10-02 11:41:07