கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி திட்டம்

Published By: Ponmalar

27 May, 2023 | 12:19 PM
image

கிழக்கு மாகாண ஆளுநரின் எண்ணக் கருவிற்கு அமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தின் சகல கடற்கரை பிரதேசங்களையும் சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி திட்டம் இன்று காலை கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் பாசிக்குடாகடற்கரையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள வீதிகள், பொது இடங்கள், யானைக் கல் கடற்கரை பகுதி என பொலித்தின் பாவனைப் பொருட்க்கள், கழிவுப் பொருட்க்கள் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு துப்பரவு செய்யப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன.

நீர் தேங்கி காணப்படும் இடங்கள் கணரக இயந்திரங்களின் உதவியுடன் மண் போட்டு நிரப்பட்டது. கால்வாய்கள் துப்பரவு செய்யப்பட்டதுடன் பற்றைக் காடுகள் அகற்றப்பட்டன.

சுற்றுலா பயணிகளை அதிகம் கவரக் கூடிய வகையில் கடற்கரையினை மாற்றம் செய்யும் வகையில் இப் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணியில் பிரதேச சபையுடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரா சபை, கல்குடா பொலிசார், பொதுச் சுகாதார பிரிவினர் பிரதேசத்தின் சனசமூக நிலையங்கள் விளையாட்டு கழகங்கள் என்பன இணைந்து இவ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவ் பணியானது பொது இடங்கள், வீதிகள் என பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு கிழமையும் இச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் பிரதேசம் தோறும் தொடர்ந்து இடம்பெற வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளது. இன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் இந் நிகழ்ச்சி திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.நவநீதன், கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.எம்.சந்திரகுமார, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பாசிக்குடா பொறுப்பாளர் எம்.எச்.மாகிர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.யசோதரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் சந்தோஷ் நாராயணனின் பிரமாண்ட இசை...

2023-09-25 21:57:12
news-image

கொய்கா - அகோஃப் அறிவுப் பரப்புரைத்...

2023-09-25 13:04:39
news-image

கேகாலை புனித அன்னை மரியாள் தேவாலயத்தின்...

2023-09-25 10:35:59
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில்...

2023-09-24 19:04:27
news-image

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை யாழில்...

2023-09-24 15:02:28
news-image

நல்லூரில் திலீபன் நினைவாக ஆவணக் காட்சியகம்...

2023-09-23 19:52:35
news-image

திருமலை, பாலையூற்று சீரடி நாக சாயி...

2023-09-23 18:47:23
news-image

ஈஷ்வரலயா கலைக்கூடத்தின் பரதநாட்டிய நிகழ்வு

2023-09-23 18:29:15
news-image

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நாளை...

2023-09-23 18:06:29
news-image

பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு

2023-09-23 19:40:52
news-image

விநாயகர் சதுர்த்தி விஷர்ஜன விழா 

2023-09-22 18:32:02
news-image

1500 ஓவியங்களைக் கொண்ட 3 நாள்...

2023-09-22 18:36:44