ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

Published By: Nanthini

27 May, 2023 | 10:01 AM
image

பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களான 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு நேற்று (26) சென்றடைந்துள்ளனர். 

தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கோதண்டராம கோயில் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பேர் நிற்பதாக கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

அதனையடுத்து, அங்கு சென்ற கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், அங்கே நின்றுகொண்டிருந்த மூவரையும் விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர்கள் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஜிம்ஸ்ரிவ் என்கிற விஜயன் (46), அவரது மனைவி ராஜினி (45), மகள் திபேந்தினி (18) ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி, கள்ளப்படகு மூலம் வெள்ளிக்கிழமை (26) நள்ளிரவில் தனுஷ்கோடியை சென்றடைந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் 3 பேரையும் படகில் அழைத்துச் சென்றவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராம கோயில் கடலோர பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். 

நள்ளிரவிலிருந்து காலை வரை அவர்கள் அங்கு தவித்தபடி நின்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

இதையடுத்து, அந்த மூன்று பேரையும் மீட்டு, கரைக்கு அழைத்துச் சென்ற கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், நேற்று (26) அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

அங்கே உரிய விசாரணைக்குப் பின்னர், மூவரும் மண்டபத்தில் உள்ள தாயகம் திரும்பியோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022 மார்ச் 22ஆம் திகதி முதல் தற்போது வரை இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு புகலிடம் தேடிச் சென்ற  அகதிகளின் எண்ணிக்கை 257ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்பு இறக்குமதிக்கு சுகாதார அமைச்சு தடைவிதித்ததா...

2025-05-23 14:39:00
news-image

161 உள்ளுராட்சிமன்றங்கள் தொடர்பில் விரைவில் வர்த்தமானி...

2025-05-23 14:30:53
news-image

கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக...

2025-05-23 13:35:13
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-05-23 13:00:45
news-image

இலங்கையில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையிலான...

2025-05-23 12:51:21
news-image

இலங்கை சிறைச்சாலையில் உரிமைகள் இல்லை- உணவுகள்...

2025-05-23 12:38:08
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது!

2025-05-23 12:30:09
news-image

பொலிஸ் உயர் பதவிகளில் திடீர் மாற்றம்...

2025-05-23 12:39:03
news-image

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பான விசாரணைக்...

2025-05-23 12:20:55
news-image

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட அறுவர்...

2025-05-23 11:36:29
news-image

போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த 18 மில்லியன்...

2025-05-23 11:35:11
news-image

சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர்...

2025-05-23 11:32:16