ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை

Published By: Digital Desk 3

26 May, 2023 | 09:32 PM
image

புத்தளம் பகுதியில் ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் கைதுச் செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை வழங்கப்பட்டது.

குறித்த மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு கடந்த 23ம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

29 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 25 மாணவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24ம் திகதியன்று 4 பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிரப்பித்துள்ளார்.

அத்துடன் ஏனைய மாணவர்களில் வியாழக்கிழமை 17 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நேற்று கைது செய்யப்பட்ட 17 பேரையும் பொலிஸார் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் இதுவரைக் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் நீதவான் எஸ்.ஏ.எம்.சீ சதுரசிங்ஹவினால் பினை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் சாதாரண தர பரீட்சைகள் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் புத்தளம் பொலிஸ் நிலையத்திகுச் சென்று காலை 8 மணியிலிருந்து 12 மணிக்குள் கையொப்பமிடவேண்டுமென்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08