ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை

Published By: Digital Desk 3

26 May, 2023 | 09:32 PM
image

புத்தளம் பகுதியில் ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் கைதுச் செய்யப்பட்ட மாணவர்கள் 21 பேருக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் பிணை வழங்கப்பட்டது.

குறித்த மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு கடந்த 23ம் திகதி பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

29 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 25 மாணவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

24ம் திகதியன்று 4 பேர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிரப்பித்துள்ளார்.

அத்துடன் ஏனைய மாணவர்களில் வியாழக்கிழமை 17 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது நேற்று கைது செய்யப்பட்ட 17 பேரையும் பொலிஸார் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆசிரியர் தாக்கப்பட்டமையினால் இதுவரைக் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் கடுமையான நிபந்தனையின் கீழ் நீதவான் எஸ்.ஏ.எம்.சீ சதுரசிங்ஹவினால் பினை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன் சாதாரண தர பரீட்சைகள் முடிவடைந்தவுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் புத்தளம் பொலிஸ் நிலையத்திகுச் சென்று காலை 8 மணியிலிருந்து 12 மணிக்குள் கையொப்பமிடவேண்டுமென்றும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தெளிவாக எடுத்துரைத்துள்ளமை...

2023-05-31 20:15:25
news-image

சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2023-05-31 20:34:12
news-image

வெளியானது அதி விசேட வர்த்தமானி !

2023-05-31 22:13:35
news-image

எரிபொருள் விலையில் மாற்றம் - விலை...

2023-05-31 22:02:03
news-image

இராணுவ போர் தளபாட தொழிற்சாலையை மேம்படுத்த...

2023-05-31 17:26:48
news-image

பிரதமர் தினேஷ் குணவர்தன - தாய்லாந்து...

2023-05-31 20:33:16
news-image

நடாஷா எந்தவொரு கத்தோலிக்க பாடசாலையின் பழைய...

2023-05-31 20:35:44
news-image

ஒளிபரப்பு அதிகாரசபை சட்டம் ஊடாக ஊடங்களையோ...

2023-05-31 16:26:40
news-image

ஊடகவியலாளர் நடேசன் அச்சுறுத்தப்பட்டு 3 வருடங்களின்...

2023-05-31 20:25:17
news-image

இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் நீதி அமைச்சரின்...

2023-05-31 20:28:49
news-image

நடாசாவிவகாரம் - யூடியுப் உரிமையாளர் கைது

2023-05-31 19:57:49
news-image

மத சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு முழுமையான...

2023-05-31 15:07:43