(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாகும் அணிக்கு 48 கோடியே 37 இலட்சத்து 31,040 பணப்பரிசாக கிடைக்கவுள்ளது.
அப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இந்தந் தொகையில் சரிபாதி பணப்பரிசு (241,865,520 ரூபா) கிடைக்கும்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பங்குபற்றிய 9 அணிகளுக்கும் மொத்தமாக (3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) 114 கோடியே 88 இலட்சத்து 61,220 ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்படும்.
இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவதற்காக நியூஸிலாந்துடன் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்குபற்றி தோல்வி அடைந்ததால் 3ஆம் இடத்திலிருந்து 5ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கைக்கு 9 கோடியே 6 இலட்சத்து 99,570 ரூபா கிடைக்கவுள்ளது.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் 5 நாட்களில் முடிவு கிட்டாவிட்டால் போட்டி 6ஆவது நாள் தொடர்ந்து நடைபெறும்.
சம்பியன் அணிக்கு 48 கோடி ரூபா பணப்பரிசாக கிடைக்கவுள்ளதால் இப் போட்டி இரண்டு அணிகளுக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுப்பதுடன் ஒன்றையொன்று வீழ்த்தும் முயற்சியில் இறங்கவுள்ளன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவுத்ஹம்ப்டனில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் இந்தியாவை வெற்றிகொண்ட கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்துக்கு டெஸ்ட் வெற்றி கோலுடன் (Test Mace) இதே தொகை பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2021-23இல் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தைப் பெற்ற தென் ஆபிரிக்காவுக்கு 13 கோடியே 60 இலட்சத்து 49,355 ரூபா பணப்பரிசும் நான்காம் இடத்தைப் பெற்ற இங்கிலாந்துக்கு 10 கோடியே 58 இலட்சத்துக்கு 16,165 ரூபா பணப்பரிசும் கிடைக்கவுள்ளது.
6ஆவது, 7ஆவது, 8ஆவது, 9ஆவது இடங்களில் முறையே உள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு தலா 3 கோடியே 2 இலட்சத்து 33,190 ரூபா பணப்பரிசு கிடைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM