( எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
துறைமுகத்தில் 35 சதவீதம் பெறுமதி சேர் வரி அறவிடாமல் எந்த பொருட்களும் மீள் ஏற்றுமதி செய்யப்படமாட்டாது. எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதியின் போது முறையான பெறுமதி சேர் வரி அறவிடப்படுவதில்லை என குறிப்பிட்டார்.இதற்கு பதிலளிக்கையில் நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
துறைமுகத்தின் ஊடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சகல தேசிய உற்பத்திகளுக்கும் 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும்.
இந்த வரி கொள்கை முறையாக செயற்படுத்தப்படுகிறது.எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி உரிய தகவல்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
மீள் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.ஏற்றுமதி கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM