சிட்னியில் நேற்று இடம்பெற்ற பாரியதீவிபத்து தொடர்பில் 13 வயது சிறுவர்கள் இருவர் அவுஸ்திரேலிய காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சிட்னியில் நேற்று இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் பாராம்பரிய கட்டிடமான ஏழு தளங்களை கொண்ட கட்டிடமொன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.ரன்டில் வீதியில் உள்ள ஒரு நூற்றாண்டு பழமைவாய்ந்த முன்னைய ஹென்டர்சன் தெர்ப்பி தொழிற்சாலையே தீயினால் முற்றாக அழிந்துள்ளது.
தீமூண்டதும் அந்த கட்டிட பகுதியிலிருந்து பதின்மவயதினர் சிலர் ஒடியுள்ளனா என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
13வயது சிறுவர்கள் இருவர் வெவ்வேறு காவல்நிலையங்களில் சரணடைந்துள்ளனர் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.அவர்கள் விசாரணையில் உதவுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய சந்தேகநபர்களும் 13 வயதானவர்களாகயிருக்கலாம் என காவல்துறை அதிகாரிதெரிவித்துள்ளார்.
நேற்யை தீவிபத்தை ஒருதசாப்தத்தில் ஏற்படும் விபத்து என தீயணைப்பு மற்றும் மீட்புபிரிவின் ஆணையாளர் ஜெர்மி பியுட்ரெல் தெரிவித்துள்ளார்.
மிகவும் கடுமையாக காணப்பட்ட தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக தீயணைப்பு வீரர்கள் இரவுமுழுவதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்,சில கட்டிடங்கள் இடிந்துவிழும் ஆபத்து காணப்பட்டது என தீயணைப்பு பிரிவின் அதிகாரியொருவர்தெரிவித்துள்ளார்.
அதுவேகமாக அதிகரித்துவரும் தீயாக காணப்பட்டது கைவிடப்பட்ட கட்டிடம் பழைய மரங்கள் போன்றவை காரணமாக தீ மிகவும் வேகமாக பரவியது என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தீயினால் முற்றாக அழிந்துபோயுள்ள கட்டிடத்திற்குள் முதல்நாளிரவு 15 பேர்உறங்கியுள்ளனர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
அருகில் உள்ள கட்டிடங்கள் சிலவற்றிற்கு ஆபத்து காணப்பட்டது ஜன்னல்கள் விழுந்து நொருங்கின என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சுவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன அவை விழக்கூடும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM