ரஷ்யா-உக்ரைன் போரின் 'நன்மைகளை' அதிகப்படுத்துவதற்கான சீனாவின் மூலோபாயத்தை இந்தியா பின்தொடர்வது பலவீனப்படுத்துகிறது. ஆனால், மோடி-ஜெலென்ஸ்கி சந்திப்பு சீனாவை மௌனிக்க செய்யும் மற்றொரு காரணியாகவும் உள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பானது சீனாவை எரிச்சலடையச் செய்துள்ளது. ஜப்பானில் ஜெலென்ஸ்கியை சந்தித்த பிறகு சீன நிபுணர்கள் மோடியை 'சந்தர்ப்பவாதி' என்றும் 'ஏமாற்றுபவர்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனுக்கான மோடியின் உறுதிமொழிகள் - போரின் பொருளாதார பாதிப்பை புறக்கணிக்கும் போது - பெய்ஜிங்கிற்கு அசௌகரியமாக இருக்கும். ஏனெனில் இந்தியா அதன் தேசிய நலனை அதிகப்படுத்துகிறது. ஆனால் பெய்ஜிங் ஒரு காரணியாக இருக்கக்கூடாதுஎன்பதுடன், உக்ரைன் போரைத் தீர்ப்பதில் மனிதாபிமான அணுகுமுறை தொடர வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.
நான் இதை ஒரு அரசியல் அல்லது பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை, இது மனிதநேயத்தின் பிரச்சினை. மனித விழுமியங்களின் பிரச்சினை என்று ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பின் போது மோடி கூறினார்.
பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நடைமுறை அர்த்தமானது,
மேற்கத்திய நாடுகள் இந்தியாவின் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களால், ரஷ்ய எண்ணெய் மற்றும் உக்ரேனிய கோதுமையை வாங்க முடியாது. இது உண்மையான மனிதாபிமான பேரழிவாகும்.
சீனாவின் கவலைகள்
ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில் இந்தியா 'தேசிய நலனை' நாடுவது, போரின் 'நன்மைகளை' அதிகப்படுத்தும் சீனாவின் மூலோபாயத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளையில், மோடி - ஜெலென்ஸ்கியை சந்திப்பதில் சீனா கவலையடைய மற்றொரு காரணமும் உள்ளது.
சீனா சமீபத்தில் உக்ரைனுக்கான தனது தூதராக மூத்த இராஜதந்திரி லி {ஹயியை அனுப்பியது. ரஷ்யாவை அழைக்காமல் 'அமைதிக்கு மத்தியஸ்தம் செய்வதில்' பெய்ஜிங் ஆர்வமாக உள்ளது என்பதை உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM