'கணேஷிஸம் - 5' என பெயரிடப்பட்டுள்ள விநாயகக் கடவுளை கொண்டாடும் வகையில் தீட்டப்பட்ட ஓவியங்களின் கண்காட்சி எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு 3இல் உள்ள Barefoot Galleryயில் இடம்பெறவுள்ளது.
இந்துக்களால் அதிகளவில் வழிபடப்படும் விநாயகரை சித்திரிக்கும் ஓவியங்களை பிரத்தியேகமாக அமைக்கும் கலைஞரான மகேன் சண்முகத்தின் கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்த ஓவியங்கள் பலவிதமான உணர்வுகள் மற்றும் கருப்பொருள்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதோடு, விநாயகரது உருவப்படத்தின் சமகால விளக்கங்கள், அகங்காரத்தில் இருந்து விடுபடுதல் போன்ற தத்துவ ரீதியான விடயங்கள் ஒரு தெளிவான திரையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
சண்முகம், தனது நவீன ஆற்றல் மிக்க மற்றும் வண்ணமயமான அக்ரிலிக் ஓவியங்கள் மூலம் அடிக்கடி தவறாக புரிந்துகொள்ளப்படும் மதக் கருத்துக்களிலிருந்து விலகி, ஆழ்ந்த பிரபஞ்ச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிலையை பற்றிய ஆய்வின் ஊடாக ஒருவரை தனிப்பட்ட பயணத்தில் அழைத்துச் செல்லக்கூடியவர் ஆவார்.
இவர் சிங்கப்பூரிலும் பல தனிக் கண்காட்சிகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM