மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்றையதினம் மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்து செல்லப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிவப்பு நிற ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் உட்பட கடத்தி செல்லப்பட்ட 20,000 மில்லி லீட்டர் கசிப்பு உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பிரதான வீதியில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் அமைந்துள்ள விசேட சோதனை சாவடியில் வைத்து கைதானார்.
மேலும் கைதான சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM