இத்தாலியில் வாகன விபத்தில் சிக்கி இலங்கையர் உயிரிழப்பு !

Published By: Digital Desk 5

24 May, 2023 | 02:09 PM
image

இத்தாலியின் பெர்காமோ நகரில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இத்தாலி பெர்கமோவில் வசித்து வந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் பெர்காமோவில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச்  சென்று கொண்டிருந்தபோது எதிர்த் திசையில் இருந்து வந்த கொள்கலன் வாகனம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சஞ்சீவ பிரதீப், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

வென்னப்புவ கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற இவர்  24 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் வேலைக்கு சென்று தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் கடந்த 21ஆம் திகதி இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38
news-image

நாராஹேன்பிட்டியில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

2025-03-20 17:44:18
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; 107...

2025-03-20 17:28:45
news-image

யாழில் அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக...

2025-03-20 17:40:56
news-image

கராபிட்டிய வைத்தியசாலையில் கதிரியல் சிகிச்சைகள் ஸ்தம்பிதம்

2025-03-20 17:39:42
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 17:28:26
news-image

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்பு...

2025-03-20 17:39:18
news-image

அலோசியஸிடமிருந்து நிதிபெற்ற அரசியல்வாதிகளின் பட்டியல் விரைவில்...

2025-03-20 15:19:36