அடுத்த ஆண்டில் இலகு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் - ஐக்கிய தேசிய கட்சி

Published By: Digital Desk 5

24 May, 2023 | 11:58 AM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் விஜயத்தின் பிரதி பலனாக அடுத்த ஆண்டு இலகு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்று நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு முதலீட்டாளர்களுடன் விசேட கலந்துரையாடல்களின் ஈடுபடவுள்ளார். இதன் போது ஜைக்கா நிறுவனத்துடன் இலகு ரயில் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

அதற்கமைய அடுத்த ஆண்டு இந்த வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க முடியும் என்று நம்புகின்றோம். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது தூதுக்குழுக்களுடன் ஆடம்பரமாக செல்லவில்லை. செலவுகளைக் குறைத்து மிக எளிமையாகவே சென்றிருக்கின்றார்.

எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் 2030 க்குள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காகும். எனவே இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல்களை நடத்துவதால் எவ்வித மாற்றமும் இடம்பெறப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43