டோக்கியோவில் நடைபெறும் 28 ஆவது ஆசியாவின் எதிர்காலம் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (24) ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜப்பானின் ஏற்பாட்டில் 28 ஆவது ஆசியாவின் எதிர்காலம் மாநாடு இம்மாதம் 24 - 27 ஆம் திகதிவரை தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார்.
அதேவேளை இவ்விஜயத்தின்போது ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி, வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாஸா மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் டாரோ கோனோ ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருதரப்புக் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.
அதுமாத்திரமன்றி இருநாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கக்கூடிய கலாசார உறவுகளை ஊக்குவிப்பதுடன் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றிவரும் ஜப்பான் - இலங்கைப் பாராளுமன்ற நட்புறவுக்கழகத்தின் அதிகாரிகளையும் ஜனாதிபதி இதன்போது சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மேலும் இதன்போது டோக்கியோவில் உள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக மாநாட்டைத் தொடர்ந்து, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு மற்றும் ஜப்பான் - இலங்கை வர்த்தக ஒத்துழைப்பு சபையுடன் இணைந்து வர்த்தக சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்காக ஜப்பானில் உள்ள இலங்கை வர்த்தக சபையுடன் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM