வீதியை விட்டு விலகி வயலுக்குள் சென்ற பஸ் : ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மீட்ட மக்கள் - வட்டுக்கோட்டையில் சம்பவம்

Published By: Nanthini

21 May, 2023 | 08:57 PM
image

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் இன்று (21) பகல் வீதியில் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியிலிருந்து விலகி, வயலுக்குள் பாய்ந்துள்ளது. 

இதனையடுத்து, ஜே.சி.பி. (JCB) இயந்திரத்தின் மூலம் அப்பேருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்தபோது,  பேருந்து அதன் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே வயல்வெளிக்குள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதிர்ஷ்டவசமாக, இந்த பேருந்து இன்று  பயணிகள் சேவையில் ஈடுபட்டிராத நிலையில்,  பேருந்தில் சில இ.போ.ச. ஊழியர்கள் மாத்திரமே பயணித்திருந்தனர். இதனால், ஒருவருக்கும் ஆபத்தான நிலை நேரிடவில்லை என்றும் பேருந்தின் படிகள் மாத்திரம் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜே.சி.பி. இயந்திரத்தின் துணையோடு பேருந்தை தூக்கி, இழுத்து வீதிக்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் காரணமாக சிறிது நேரம் பதற்றநிலையில் அப்பகுதி மக்கள் காணப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55