கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 7 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கிய கனேடிய தமிழர்கள்!

Published By: Nanthini

21 May, 2023 | 12:17 PM
image

கனடிய தமிழர்கள் 7 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress - CTC) ஏற்பாடு செய்யப்பட்ட நிதிசேர் நடைபவனியூடாக திரட்டப்பட்ட நிதியின் இரண்டாவது நன்கொடை இதுவாகும்.

கடந்த ஆண்டு முதலாவது நன்கொடைத் தொகுதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிடம் கையளிக்கப்பட்டது. 

கனடிய தமிழர் பேரவை தமது வருடாந்த நிதிசேர் நடைபவனியூடாக வருடந்தோறும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகிறது.

இலங்கையின் மோசமான பொருளாதாரச் சரிவினால் உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையை நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் அதிகளவில் எதிர்கொண்டு வருகின்றன. 

இந்தச் சூழலை கருத்திற்கொண்டு மனிதநேய அடிப்படையில் 2022ஆம் ஆண்டு கனடிய தமிழர் பேரவையினரால் 14ஆவது வருடாந்த தமிழ் கனடிய நிதிசேர் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் திரட்டப்படும் நன்கொடை மூலம் இலங்கையில் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள் வழங்குவதென திட்டமிடப்பட்டது.

இந்த நன்கொடையின் மூன்றாம் கட்டமாக கனடிய தமிழர் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட மூன்றாம் தொகுதி மருந்துப் பொருட்கள் கடந்த மே 17ஆம் திகதி புதன்கிழமை காலை 11 மணிக்கு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.

கல்முனை ஆதார வைத்தியசாலை இயக்குநர் மருத்துவர் இராசரட்ணம் முரளீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கனடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி மற்றும் மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் துரைரத்தினம், R. துசியந்தன், வைத்தியசாலை நிர்வாக பொறுப்பதிகாரி தேவஅருள் தோமஸ் மற்றும் பல மருத்துவ நிபுணர்கள், மருத்துவமனை வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

எதிர்வரும் மாதங்களில் ஏனைய மருத்துவமனைகளுக்குமான நன்கெடைகள் திட்டமிட்டபடி, கனடிய தமிழர் பேரவையினால்  ஒழுங்கமைக்கப்பட்டு கையளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35
news-image

சமூக சேவையாளர் செல்வராசா முரளீதரனுக்கு மெல்போர்ன்...

2023-05-27 12:13:28
news-image

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதனின் 'இலண்டனிலிருந்து...

2023-05-26 18:12:46
news-image

பன்வில பிரதேச மாணவர்களுக்கு புத்தகங்கள், கற்றல்...

2023-05-26 21:11:21