இவ்வருட பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியிலிருந்து நடப்புச் சம்பியான ரபாயெல் நடால் விலகியுள்ளார்.
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இச்சுற்றுப்போட்டியிலிருந்து தான் விலகுவதாக நடால் அறிவித்துள்ளார். அத்துடன் தொழிற்சார் டென்னிஸ் போட்டிகளிலிருந்து 2024 ஆம் ஆண்டுடன் ஓய்வு பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
36 வயதான ஸ்பானிய வீரரான ரபாயெல் நடால், பிரெஞ்சு பகிரங்கப் போட்டிகளில் 14 தடவைகள் சம்பியனாகி சாதனை படைத்தவர்.
22 கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வெற்றுள்ள அவர், ஆகக்கூடுதலான கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் பட்டியலில் சேர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.
பிரெஞ்சுப் பகிரங்கப் போட்டிகளில் 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி, தனது முதல் முயற்சிலேயே அச்சுற்றுப்போட்டியின் சம்பியன் பட்டத்தை வென்றவர் நடால். களிமண் தரை போட்டிகளின் ஜாம்பவானான ரபாயெல் நடால், பிரெஞ்சுப் பகிரங்க சுற்றுப்போட்டியிலிருந்த விலகுவது இதுவே முதல் தடவையாகும்.
'இது நான் மேற்கொண்ட தீர்மானமல்ல, இது எனது உடலின் தீர்மானம்' என தனது சொந்த ஊரான மனகோவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் நடால் கூறினார்.
சில மாதங்கள் தான் ஓய்வு பெறவுள் ளதாக நடால் கூறினார். இதன்படி, அவர் எதிர்வரும் விம்பிள்டன் போட்டிகளில் பங்குபற்றமாட்டார். பெரும்பாலும் அமெரிக்கப் பகிரங்கப் போட்டிகளிலும் பங்குபற்றமாட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM