உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் முப்பெரும் தமிழ் விழாவை நடத்தவுள்ளது.
இந்த விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் யாழ். பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான முனைவர் மு.இறைவாணி, முனைவர் மு.பாமா உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், தமிழ்ச் சேவையாற்றிய பலருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் யாழ்ப்பாண பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினரால் இந்நிகழ்வு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM