கடவுச்சீட்டு விநியோகம் குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Published By: Digital Desk 3

18 May, 2023 | 05:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இணையவழியில் திகதி மற்றும் நேரம் ஒதுக்கும் முறை 17ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் கடவுச்சீட்டு விநியோக்கப்படுகிறது என  குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.

கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு திணைக்களம் எடுத்துவரும் புதிய நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள இணையவழியில் திகதி மற்றும் நேரம் ஒதுக்கும் முறை 17ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நேற்று 18ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் கடவுச்சீட்டு விநியோக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கடவுசீட்டு பெற்றுக்கொள்வதற்காக திணைக்களத்துக்கு வரும் அனைவருக்கும் அவர்கள் வருகை தரும் அடிப்படையில் டோக்கன் முறைமையில் விநியோகிக்கப்படும்.

அத்துடன் எதிர்வரும் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் திட்டமிட்டிருக்கிறது.

புதிய முறைமைக்கமைய, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள திணைக்களத்துக்கு வருகை தராமல் தங்களின் வீடுகளில் இருந்தே இணையவழி ஊடாக விண்ணப்பிக்க முடியுமான வகையில் வசதிகளை ஏற்படுத்த இருக்கிறோம்.

அதற்கு தேவையான விரல் அடையாளம் இடுவதற்காக, நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 50 பிரதேச செயலகங்கள் பெயரிடப்படும். 

அத்துடன் கடவுச்சீட்டு பெற்றுக்காெள்வதற்கான கட்டணத்தை இலங்கை வங்கி மற்றும் இணையவழி ஊடாக செலுத்துவதற்கு முடியுமான வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேநேரம் கடவுச்சீட்டை 3 தினங்களுக்குள் அரச தபால் திணைக்களத்தின் ஊடாக வீடுகளுக்கே  காெண்டுவந்து கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39