மட்டக்களப்பு மன்றேசா தியான வளாகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Published By: Vishnu

18 May, 2023 | 04:54 PM
image

இலங்கையில் சுமார் 30 வருட கால யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் முடிவுறுத்தப்பட்டது.

அந்த இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்ததோடு, அவர்களது மிகவும் பெறுமதிவாய்ந்த உடமைகளும் அழிக்கப்பட்டன.

இவ்வாறு உயிரிழந்த மக்களின் 14 ஆவது ஆண்டு நினைவஞ்சலி வணக்க நிகழ்வொன்று மட்டக்களப்பு மன்றேசா தியான வளாகத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம், மற்றும், கிறிஸ்த்தவ மக்கள் ஒன்றிணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்ததுடன், முள்ளி வாய்க்காலில் அப்போது மக்கள் தம்மிடமிருந்த அரிசியை கஞ்சி காய்சி சிரட்டைகளிலே அருந்தியது போன்று தாமும் 14 வருடங்கள் கழிந்தாலும் அந்த வலியை அனுபவிப்பதற்காக இதன்போதும் உப்புக் கஞ்சி காய்ச்சி சிரட்டைகளில் அனைவரும் பகிர்ந்து அருந்தினர்.

இதன்போது கலந்து கொண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியதோடு, தமது ஆதங்கங்களையும் தெரிவித்தனர்.

இதன்போது இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களும் கலந்து கொண்டு இறந்த உயிர்களுக்காக இறைபிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02