இன்றுமுதல் வழமைக்கு திரும்பும் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நடவடிக்கை

Published By: Digital Desk 3

18 May, 2023 | 09:48 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நாள் மற்றும் திகதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளாமல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியலாயத்துக்கு வருவதன் மூலம் மக்கள் அங்கு சில தினங்களாக வரிசையில் இருப்பதால் அந்த பகுதிக்கு வெளியில் நேற்று புதன்கிழமை நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வந்திருக்கும் மக்கள் அந்த இடத்துக்கு வெளியில் நீண்ட வரிசையில் காத்திருப்பதுடன் அவர்களில் விண்ணப்பதாரிகள் 500 பேர்வரை மாத்திரம் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

நாட்டின் தூரப்பிரதேசங்களில் வந்திருப்பவர்கள் இந்த வரிசையில் காத்திருப்பதுடன் சிலர் சிறு குழந்தைகளையும் அவர்களுடன் அழைத்து வந்திருக்கின்றனர். எப்படியாவது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியுமாகும் என்ற நம்பிக்கையிலேயே இவர்கள் அங்கு வந்திருப்பதாக அவர்களில் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

என்றாலும் இது தொடர்பாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவிக்கையில், தற்போது இந்த பகுதியில் இருக்கும் நெருக்கடி நிலை இன்றுடன் முடிவடையும். திகதி மற்றும் நேரம் ஒதுக்கிக்கொண்டுள்ள இறுதி விண்ணப்பதாரிகள் 1,800 பேருக்கு இன்றைய தினம் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகித்து முடிக்க இருக்கிறது.

இந்த மாதம் 17 ஆம் திகதிவரை மாத்திரம் திகதி மற்றும் நேரம் விநியோகித்து  இந்த முறைமையை முடித்துள்ளோம். இன்று 18ஆம் திகதி  இதற்கு முன்புபோன்று இங்குவந்து வருகைதரும் அடிப்படையில் விண்ணப்பப்படிவங்களை சர்ப்பிக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30
news-image

இலங்கையின் அபூர்வமான ‘யூனிகொர்ன்’ யானை சுட்டுக்...

2025-03-18 10:51:54
news-image

40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா...

2025-03-18 10:10:55
news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06