வெடுக்குநாறிமலையில் பூஜை வழிபாடுகளை எளிய முறையில் செய்யுங்கள் - நீதிமன்றம் உத்தரவு

Published By: Vishnu

17 May, 2023 | 09:14 PM
image

வவுனியா 

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தொல்பொருளை சேதமாக்காவண்ணம் எளியமுறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியதுடன், விக்கிரகங்கள் உடைப்புடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கு பணித்துள்ளது.

வெடுக்குநாறிமலையில் சிலைகள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கு வவுனியா நீதிமன்றில் புதன்கிழமை (17) எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில் முறைபாட்டாளார்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,

இந்த வழக்கில் தொல்பொருட் திணைக்களம் முதன்முறையாக ஆஜராகி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி முறைப்பாட்டாளர்கள் செயற்பட்டதாக தகவல் கொடுத்திருந்தனர். இன்றும் அந்த விடயத்தை சொன்னார்கள். 

இருப்பினும் தொல்பொருள் தொடர்பான இந்த பிரதேசத்திலே மார்ச் மாதம் இடம்பெற்ற மோசமான விக்கிரகங்கள் உடைப்பு சம்பவத்தில் தொல்பொருட் திணைக்களம் ஒரு விரலைகூட அசைக்கவில்லை. அந்த விடயத்தை கரிசனையில் கூட எடுக்கவில்லை.

அதனை மீள நிறுவும்படி நீதிமன்றம் உத்தரவை வழங்கிய பின்னரே  மீள நிறுவியதால் தொல்பொருள் சேதமேற்ப்பட்டதாக பொய்யான புகாரை தெரிவிப்பதாக நாம் மன்றுக்கு எடுத்துரைத்தோம். 

அந்தவிடயத்தில்  இதுவரைக்கும் சந்தேகநபராக எவரையும் குறிப்பிட வில்லை. தொல்பொருட் திணைக்களம், வனவளத்திணைக்களம் போன்றவற்றால் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுகின்ற ஒருஇடத்தில் இப்படியான விக்கிரகங்களை உடத்தமை ஒரு விசித்திரமான விடயம் என்பதையும்  கூறினோம். 

எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் பொலிசாருக்கு கட்டளை இட்டுள்ளார். அத்துடன் தொல்பொருளுக்கு சேதம் ஏற்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இது நீதிமன்ற கட்டளையை மீறி செயற்ப்படமை தொடர்பாக இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை உரியமுறையிலே எடுக்குமாறு தொல்பொருட்திணைக்களத்திற்கு மன்றால் அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தொல்பொருள் அடையாளங்கள் சேதமாகின்ற வகையில் செயற்படாவண்ணம், சமய சடங்குகளை எளியமுறையிலே செய்வதற்குமான,  எச்சரிக்கையும் முறைப்பாட்டாளர்களான  எங்களுக்கு மன்றால் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இன்றைய வழக்கில் உடைக்கப்பட்ட விக்கிரகங்ககளுடன் ஆலயத்தின் பூசாரி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 17:21:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29