அரசு தன்னிச்சையாக செயற்பட முடியாது - தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க போவதாக ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு

Published By: Vishnu

17 May, 2023 | 05:32 PM
image

(எம்.மனோசித்ரா)

பொருளாதார மறுசீரமைப்புக்களில் மக்களின் பங்களிப்பும் , அவர்களது விருப்பமும் காணப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடாகவுள்ளது.

எனவே இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்த விவகாரத்தில் குறுகிய அரசியல் நோக்கங்களுடன் நாம் செயற்பட மாட்டோம்.

அந்த வகையில் கடந்த திங்களன்று நாணய நிதிய தூதுக்குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஊழல் , மோசடிகளை ஒழித்து நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

எனினும் அரசாங்கத்தின் தற்போது பொருளாதார மேம்பாட்டு கொள்கை திட்டத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 வீதம் வளர்ச்சி வேகத்தைக் கொண்டு எதனையும் செய்ய முடியாது. அதே வேளை மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நிபந்தனைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களில் மக்களின் பங்களிப்பும் , அவர்களின் விருப்பமும் காணப்பட வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு அப்பால் மக்கள் ஆணை கொண்ட அரசாங்கம் காணப்பட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்.

எனவே மறுசீரமைப்பு விவகாரங்களில் அரசாங்கத்தால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இதனை வலியுறுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும்.

அத்தோடு நான்று ஆண்டுகள் நீடிக்கப்பட்ட கடனுதவி திட்டத்தை வழங்குவதன் மூலம் இலங்கையில் நாணய நிதியம் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன என்பது தெளிவில்லாமலுள்ளது என்பதையும் அவர்களிடம் நேரடியாகத் தெரிவித்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை...

2025-02-18 18:10:00
news-image

தானம் செய்யும் பரோபகார சிந்தனை நாட்டின்...

2025-02-18 17:58:45
news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39