(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் ஈட்டுகின்ற வருமானம் சட்டபூர்வமான வழிமுறைகள் மூலம் எமது நாட்டுக்குப் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில், புலம்பெயர் தொழில்களில் ஈடுபடுகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் உத்தேசத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் 2022.05.01 தொடக்கம் 2022.12.31 வரையான காலப்பகுதியில் அவர்கள் எமது நாட்டுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செலாவணியின் தொகை அடிப்படையாகக் கொள்ளப்படும்.
ஆனாலும், குறித்த காலப்பகுதியில் அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணியின் தொகைக்கமைய, அவர்கள் எதிர்பார்க்கின்ற இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எமது நாட்டுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செலாவணித் தொகையைக் கணிக்கும் காலப்பகுதியை 2023.09.15 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM