புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு விசேட சலுகை

Published By: Vishnu

16 May, 2023 | 05:16 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் ஈட்டுகின்ற வருமானம் சட்டபூர்வமான வழிமுறைகள் மூலம் எமது நாட்டுக்குப் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில், புலம்பெயர் தொழில்களில் ஈடுபடுகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் உத்தேசத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் 2022.05.01 தொடக்கம் 2022.12.31 வரையான காலப்பகுதியில் அவர்கள் எமது நாட்டுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செலாவணியின் தொகை அடிப்படையாகக் கொள்ளப்படும்.

ஆனாலும், குறித்த காலப்பகுதியில் அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டு செலாவணியின் தொகைக்கமைய, அவர்கள் எதிர்பார்க்கின்ற இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இருக்கவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக எமது நாட்டுக்கு அனுப்பியுள்ள வெளிநாட்டு செலாவணித் தொகையைக் கணிக்கும் காலப்பகுதியை 2023.09.15 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41