முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அனைவரும் அணிதிரள வேண்டும் - மாவை சேனாதிராஜா

Published By: Vishnu

16 May, 2023 | 12:42 PM
image

( எம்.நியூட்டன்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனைவரும் அணிதிரள வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

மே 18  முள்ளிவாய்கால்  நினைவேந்தல் தொடர்பில அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு 1948ல் சுதந்திரம் கிடைத்தது. அந்தச் சுதந்திரம் தமிழர் தேசத்திற்கு,தமிழர் தேசமக்களுக்குக் கிடைக்கவில்லை.

ஐரோப்பியரிடம் போரில் இழந்த சுதந்திரம் தமிழர் தேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும் திரும்பப் பெறும் உருத்து இலங்கையின் பூர்வீகக் குடிமக்களுக்கு ஆண்டபரம்பரைக்குக் கிடைக்காதநிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் தேச மக்கள் விடுதலைக்காக ஜனநாயக வழியிலும், ஆயுதவழியிலும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

கடந்த 70 ஆண்டுகளிலும் பௌத்தசிங்களஆட்சியின் மேலாதிக்கம் தமிழர் தேசத்தையும், தமிழ் மக்களையும் பௌத்த சிங்கள மயமாக்கி வருவதும் தமிழர் தேசமும் தமிழ் மக்களும் இன அழிவுக்கு உள்ளாக்கப்பட்டுவருவதையும்உலகம் சர்வதேசம் நன்குஅறிந்துள்ளது.

இன்றுவரைபௌத்தசிங்களமயமாக்கப்பட்டதேசத்தில் தமிழர் போரினாலும்,படையெடுப்புக்களினாலும், இனக் கலவரங்களினாலும் குறிப்பாக 2009 காலப்பகுதியில் மே-18 வரைஅழிக்கப்பட்டுவரும்நிலையில் எஞ்சியதமிழ் மக்கள் தங்கள் உயிர்களையும் எஞ்சியதமிழர் தேசத்தையும் பாதுகாக்கவும் இழந்தசுதந்திரத்தைமீட்கவும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

மே 18 நினைவேந்தல் நிகழ்ச்சிமுள்ளிவாய்க்கால் முற்றத்திலும் உலகில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும் நடைபெற்றுவுந்துள்ளநிலையில் இலங்கையிலும் நடைபெறமக்கள் அணிதிரளவுள்ளனர்.

தமிழர் பாரம்பரியத்தில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செய்வதுநினைவு கூர்வது அவர்தம் பண்பாடாகும். உயர் நாகரிகமாகும் கடந்தபதினான்கு ஆண்டுகளாக இலங்கையில் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும், தமிழர் வாழ்விடங்களிலும் இந் நிகழ்வேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.

தமிழர் பாரம்பரியத்தில் உயிர்களைபலிகொடுத்த, களப் பலியாகியமக்கள் ஆத்மாக்கள் நினைவு கூரப்படுவதும் அந்தமக்களிடத்திலேவாழ்நாளில் இறப்பில்லாது வாழ்ந்துவருவதும் இதயங்களில் நிலைகொண்டுள்ள நம்பிக்கையாகும். அந்தஆத்மாக்கள் வாழும் மக்களிடத்தில் அந்தரித்து நிற்கும் எனும் நம்பிக்கையுடன்தமிழர் கொள்கை இலட்சியத்தைநிலை நாட்டிநிற்கும் என்றதிடசங்கற்பம் தமிழர் தேசமக்களிடம் நிலைகொண்டுள்ளது.

அந்தமக்கள் அனைவரும் மே-18 முள்ளிவாய்க்காலிலும் தாம் வாழும் இடங்களிலும் அணிதிரண்டு; முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைநிறைவுசெய்துதமிழர் தேச விடுதலையைஅடைவோம் எனும்திடசங்கற்பத்தைநிலைநாட்டிக் கொள்வோம் எனவேண்டுகோள் விடுக்கின்றோம்; என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58