கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலை கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது அதிகாரிகளை தாக்கி சிறைச்சாலையை சேதப்படுத்திய 63 கைதிகளை உடனடியாக கைதுசெய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வெலிசர நீதிவான் துசித தம்மிக்க உடுவவிதான இரகசிய பொலிஸாருக்கு இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
போராட்டத்தின்போது சிறைக் கட்டடங்களுக்கு தீ வைத்ததன் மூலம் ஒரு கோடியே 74 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டத்தை கைதிகள் ஏற்படுத்தியதோடு, போராட்டத்தின்போது சிறையில் இருந்த சுமார் 19 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களையும் அழித்துள்ளனர்.
இந்த போராட்டத்தின்போது சிறைச்சாலை கட்டடங்களுக்கு தீ வைத்து தாக்கியதன் மூலம் கைதிகள் கட்டடங்களுக்கும் உணவுப் பொருட்களுக்கும் சுமார் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக அரசாங்க மதிப்பீட்டு திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையை நீதிவான் கவனத்தில் கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM