மட்டக்களப்பு ஏறாவூரில் முச்சக்கரவண்டி ஒன்றில் ஐஸ்போதைப்பொருளை வியாபாரத்துக்காக எடுத்கடத்திச் சென்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (14) 5 கிராம் ஐஸ்போதை பொருளுடன் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (14) இரவு 8.30 மணியவில் நீதிமன்ற வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி ஒன்றில் ஐஸ்போதை பொருளை வியாபாரத்துக்காக கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 5 கிராம் ஐஸ்போதை பொருளுடன் பிரபல வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டி ஒன்றை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருபவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM