(நெவில் அன்தனி)
ஹைதராபாத் ரஜீவ் காந்தி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது இரசிகளின் கட்டுமீறிய செயல்களுக்கு மத்தியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்களால் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது.
மார்க்ஸ் ஸ்டொய்னிஸ், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவருடன் ப்ரேராக் மான்காட் ஏற்படுத்திய இரண்டு முக்கிய இணைப்பாட்டங்கள் லக்னோவின் வெற்றியை இலகுபடுத்தியது.
இந்த வெற்றியுடன் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் தனது ப்ளே ஓவ் வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளதுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ப்ளே ஓவ் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 183 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
லக்னோ 8.2 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்து சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், ப்ரேராக் மான்காட் 2 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி லக்னோவின் வெற்றியை இலகுவாக்கினார்.
மார்க்ஸ் ஸ்டொய்னிஸுடன் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்த மான்காட், தொடர்ந்து நிக்கலஸ் பூரணுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து 4 பந்துகள் மீதமிருக்க அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 25 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ஒட்ட வேகத்தை சற்று அதிகரிக்கச் செய்தார்.
மான்காட் 45 பந்துகளில் 64 ஓட்டங்களுடனும் நிக்கலஸ் பூரண் 13 பந்துகளில் 44 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
சுமாரான வேகத்தில் ஓட்டங்களைப் பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தென் ஆபிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் அப்துல் சாமத்துடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டார்.
அப்துல் சாமத் ஆட்டம் இழக்காமல் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களைவிட ஆரம்ப வீரர் அன்மொன்ப்ரீத் சிங் 36 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அணித் தலைவர் க்ருணல் பாண்டியா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அப்துல் சாமத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது 19ஆவது ஓவரின் 3ஆவது பந்தை ஆவேஷ் கான் இடுப்பளவு உயரத்திற்கு வீசினார். இதனை கள மத்தியஸ்தர் நோபோல் என அழைத்தார்.
மத்தியஸ்தரின் அந்தத் தீர்ப்பை மீயாய்வு செய்யுமாறு லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் கோரியது.
இதனை அடுத்து அதனை மீளாய்வு செய்த தொலைக்காட்சி மத்தியஸ்தர் அந்த பந்து விதிகளுக்கு உட்பட்டது என கள மத்திஸ்தருக்கு அறிவிக்குமாறு பணித்தார்.
மத்தியஸ்தரின் தீர்ப்பு மாற்றப்பட்டு நோ - போல் வாபஸ் பெறப்பட்டதுடன் ப்றீ ஹிட்டும் இல்லாமல் போனது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இரசிகர்கள் சிலர் குழப்பமடைந்தனர்.
இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் தொடர்ந்தது. சற்று நேரத்தில் கிளாசன் 47 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
நோ - போல் முடிவு மாற்றப்பட்டதை டொம் மூடி உள்ளிட்ட நிபுணர்கள் கடுமையாக விமர்சித்தனர். தொலைக்காட்சி மத்தியஸ்தர் தவறான முடிவை எடுக்க ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்?' என்று அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.
'நேர்மையாகக் கூறுவதென்றால், இரசிகர்களின் செயலால்
ஏமாற்றம் அடைந்தேன. அது விரும்பத்தக்கதல்ல' என்று போட்டி முடிவில் கிளாசென் கூறினார்.
'போட்டியில் இருந்த உத்வேகத்தை அது குறைத்தது. அத்துடன் மத்தியஸ்தமும் சிறப்பாக அமையவில்லை. ஆனால் விடயங்கனை சொந்த கைகளில் எடுக்க முடியாது' எனவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியில் ஐபிஎல் ஒழுக்க விதிகளை மீறினார் என்ற காரணத்திற்காக க்ளேசனின் போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM