ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வு இடைநிறுத்தம்: இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published By: Sethu

12 May, 2023 | 01:54 PM
image

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிபதி எச்.எச்.வர்மா உட்பட 68 நீதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை இடைநிறுத்தி வைக்க இந்திய உச்ச நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டது. 

காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ராகுல் காந்தி, 2019 பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்pன்போது, மோடி எனும் பெயரை பயன்படுத்தி அவதூறாக பேசினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில்  சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிவான் ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா (எச்.எச்.வர்மா) ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பினால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். 

இந்நிலையில், நீதிவான் எச்.எச்.வர்மா உள்ளிட்ட 68 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்க குஜராத் அரசு பரிந்துரை செய்தது. 

இந்த 68 பேரின் பதவி உயர்வையும் எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. மூத்த சிவில் நீதித்துறை அதிகாரிகளான ரவிக்குமார் மஹேதா மற்றும் சச்சின் பிரதாப் ராய் மேத்தா ஆகியோர் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வந்தது. 

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர் ஷா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,'குஜராத்தில்  நீதிபதிகள் 68 பேருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. பதவி உயர்வு பற்றிய வழக்கு விசாரணையில் உள்ள போதே குஜராத் அரசு பதவி உயர்வு அறிவிக்கை வெளியிட்டதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு அளிக்கும் குஜராத் உயர்நீதிமன்ற பரிந்துரை மற்றும் அரசின் அறிவிக்கை சட்டவிரோதமானது. ஏற்கனவே இருந்த பதவியிலேயே நீதிபதிகள் தொடர உத்தரவிடப்படுகிறது,' எனத் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10