பலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் கடந்த செவ்வாய் முதல் நடைபெற்ற தாக்குதல்களால் 29 பலஸ்தீனியர்களும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை 3 ஆவது நாளாக தாக்குதல்கள் தொடர்ந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்களில் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில சிறுவர்கள் உட்பட பொதுமக்களும் அடங்கியுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 90 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, காஸாவிலிருந்து ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்று இஸ்ரேலலின் ரெஹவோத் நகரில் வீழந்ததால், ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இஸ்ரேலின் ஏனைய பகுதிகளில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்துக்கும் இடையே போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு எகிப்து முயற்சிக்கிறது. இதேவேளை, உடனடியாக போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியன வலிறுத்தியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM