இலங்கை அரசாங்கத்திடம் இழப்பீடு கோரும் இந்திய மீனவர்கள்

Published By: Vishnu

10 May, 2023 | 09:02 PM
image

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மே 20-ஆம் திகதிக்குள் விடுவிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாரிய போராட்டம் வெடிக்கும் என இராமநாதபுரம் மீனவ சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ள சங்கத்தின்  செயலாளர் இது தொடர்பான மகஜரை இந்திய மத்திய அரசின் அதிகாரிகளிடம் கையளிப்பதற்காக தமிழக முதலமைச்சரிடம் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 65 மீனவர்களைத் தவிர, 2018 ஆம் ஆண்டு முதல்  2023 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 130 இந்திய மீன்பிடிக் கப்பல்கள் இலங்கை கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த சங்கம் தமது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்தப் படகுகளுக்காக இலங்கை அரசிடம் இருந்து படகொன்றுக்கு 5 லட்சம் இந்திய ரூபாவினை இழப்பீடாக  பெற்று கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மீனவர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் பொது ஏலத்தில் விற்கப்படும் இந்திய மீனவர்களின் படகுகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தில் இந்திய மீனவர்களுக்கு எவ்வித பணமும் கிடைக்க பெறாதது பெரும் அநீதி என  மீனவ  சங்கத்தின் செயலாளர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ் மிதிபலகையிலிருந்து கீழே விழுந்து ஒருவர்...

2025-02-17 17:00:55
news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22