பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பிரத்தியேக ஆசனங்கள்: எயார் இந்தியா திட்டம்

Published By: Devika

17 Jan, 2017 | 05:13 PM
image

தமது விமானங்களில் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெண்களுக்கான பிரத்தியேக ஆசனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இந்தியாவின் தேசிய விமான சேவையான எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

எயார் இந்தியா விமானங்களில் கடந்த மாதம் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அடுத்தே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமது விமானங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்கும் சௌகரியத்துக்கும் தாமே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பெண்களுக்கான பிரத்தியேக ஆசனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வார இறுதி முதல் உள்நாட்டு விமானச் சேவைகளில் அறிமுகமாகும் இந்த வசதி, இவ்வருட இறுதிக்குள் அனைத்து எயார் இந்தியா விமானங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும், இதற்காகப் பிரத்தியேகக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்பட மாட்டாது என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42