ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலை நிறுத்தம் : 5 அலுவலக ரயில் சேவைகள் இரத்து!

Published By: Vishnu

10 May, 2023 | 01:04 PM
image

ரயில் நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து ரயில் பாதைகளிலும் புதன்கிழமை (10) காலை திட்டமிடப்பட்ட ஐந்து அலுவலக ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, ரயில் நிலைய அதிபர்கள் சங்கத் தலைவர் தெரிவிக்கையில், புதன்கிழமை (10) நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தம் தொடரும் என  கூறியுள்ளார். 

இது இவ்வாறிருக்க, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, நானுஓயாவிலிருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த கடுகதி ரயில் இன்று சேவையில் ஈடுபடாது. 

இன்று அதிகாலை 3.55 மணிக்கு கணேவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் பாணந்துறை வரை இயக்கப்படவிருந்த அலுவலக ரயில் சேவையில் ஈடுபடாது. 

மற்றைய ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய கல்வியியல் கல்லூரில் மாணவி தவறான...

2025-05-24 13:29:53
news-image

துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்!

2025-05-24 13:40:20
news-image

பூநகரியில் அரச காணிகளில் அத்துமீறல் :...

2025-05-24 13:05:32
news-image

நன்னேரியவில் புதையல் தோண்டிய இருவர் கைது!

2025-05-24 12:34:24
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய...

2025-05-24 12:51:36
news-image

ஜனாதிபதி ஜூன் மாதம் ஜேர்மனிக்கு விஜயம்...

2025-05-24 12:39:26
news-image

அரச நிறுவனங்களில் இலஞ்ச பணத்தை கூட்டாக...

2025-05-24 12:56:26
news-image

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை செய்ய வேண்டாமெனத் தெரிவித்த...

2025-05-24 11:48:00
news-image

ஜனாதிபதியின் ஜேர்மனி விஜயத்தின் போது பயங்கரவாத...

2025-05-24 12:12:21
news-image

சிறைச்சாலையில் தகராறு ; “புரு முனா”வும்...

2025-05-24 11:08:10
news-image

உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றில்...

2025-05-24 11:57:55
news-image

ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி பலி...

2025-05-24 11:41:15