பஹ்ரேனில் பொலிஸாரைத் தாக்கிய மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Published By: Devika

17 Jan, 2017 | 04:31 PM
image

பொலிஸாரைக் கடுமையாகத் தாக்கிய குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மூன்று ஷைதி இளைஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியிருக்கிறது பஹ்ரேன் அரசு!

குறித்த இளைஞர்கள் மூவரும் பஹ்ரேன் அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள். இவர்கள் மூவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது என்றும், இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் சித்திரவதையின் பேரிலேயே சாட்சியமளித்தனர் என்றும் மனித உரிமை இயக்கங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அலட்சியம் செய்த அரசு, கடந்த ஞாயிறன்று இந்த மூன்ற இளைஞர்களையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றியது.

பஹ்ரேனில் ஏற்பட்ட அசாதாரணச் சூழல்கள் 2011ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, முதன்முறையாக இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து ஷைதி இனத்தவர்கள் போராட்டம் நடத்தியபோதும், பொலிஸார் அந்தப் போராட்டத்தைத் தடை செய்துவிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42