பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர்.
சம்பவத்தில் 10 கைதிகள் உயிரிழந்துள்ளதோடு பெரும்பாலானோர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறைக்குள் தொடர்ந்து துப்பாக்கி சண்டையும், வெடி குண்டு சத்தமும் கேட்பதாகவும் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM