திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் : மனோ கணேசன்  

Published By: MD.Lucias

14 Jan, 2017 | 06:41 PM
image

ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என எதிர்வரும் திங்கட்கிழமை தெளிவாக சொல்வேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள்  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பில் அமைச்சர் மனோ கணேசனிடம் ஊடகங்கள் இன்று வினவிய போது அமைச்சர்கூறியதாவது,

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இடை நிறுத்தப்பட்டு இருந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்கின்றது, கிடைத்து விட்டது என்ற கோஷங்கள் இலங்கை அரசியல் பரப்பில் இன்று எழுப்பப்பட்டு வருகின்றன. மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுவான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (சிசிபிஆர்) என்ற விதிகளில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை கடைபிடிக்காமை தொடர்பில் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீஎஸ்பி+ வரிசலுகை கடந்த ஆட்சியில், ஐரோப்பிய ஒன்றியத்தால் இடை நிறுத்தப்பட்டது. இந்த நல்லாட்சியில் அது மீண்டும் வழங்கப்படும் என்ற கருத்து இப்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இலங்கையின் ஏற்றுமதி பெறுமதியில் அரைவாசியை அடையக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி மீண்டும் கிடைக்குமானால், இலங்கையின் ஆடை ஏற்றுமதி துறையில் மீள் எழுச்சியும், பெருந்தொகை வேலைவாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜீஎஸ்பி+ வரிசலுகை கிடைக்குமானால், அது இன்றைய இலங்கை பொருளாதாரத்துக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

“உண்மையில் எனக்கு தெரிய ஐரோப்பிய ஆணைக்குழு, இலங்கைக்கு மீண்டும் சலுகைகள் வழங்க சிபாரிசு மட்டுமே செய்துள்ளது. இது இனி ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்ற தடைகளை கடக்க வேண்டும். ஆணைக்குழு என்பது, ஒன்றியத்தின் நிர்வாக குழு ஆகும். வரி சலுகைகள் வழங்க இன்னமும் முன்னோக்கி நகர வேண்டும். இந்நிலையில், இலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, திங்கட்கிழமை எனது அமைச்சில் என்னை சந்தித்து பேச்சுகள் நடத்த உள்ளது. அதன்பின்னர் இதுபற்றி தெளிவான உண்மை நிலை பற்றி அறிந்துக்கொள்ள முடியும். அதுபற்றி அதன்பிறகு அறியத்தருகிறேன்”  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31